Thursday, December 7, 2023

காலனும் காலமும்

 விக்கிரமாதித்யன் காலத்திலேயே உஜ்ஜைன் பல்கலைகழகத்தில் பிரம்ம குப்தர். பூஜியத்தை கணிதவியலில் சேர்த்தார். ஆரியபட்டரும், பாஸ்கர பட்டாசாரியரும் லீலாவதி கணிதம் போன்ற முக்கிய கணித நூல்களை எழுதினர். பாரத்தில் சூரியன் முதலில் உதிக்கும் இடத்தை அருணாசல பிரதேசம் எனவும் மறையும் இடத்தை அஸ்தாசலம் என்றும் கூறினர். ( இன்று மேற்கு ஆப்கானிஸ்தானுக்கும் கிழக்கு ஈரானுக்கும் நடு பகுதி). விக்ரமாதித்தன் தன் பெயரால் விக்ரம ஆண்டு(era)துவங்கினான். அவருக்கு பின் வந்த சாலிவாகன்ன் தன் பெயரால் சாலிவாகன சகாப்தம் என்ற காலளவை( calendar ) த்தொடங்கியது. இருவரும் உஜ்ஜைனின் சக்கரவர்ததி கள். இதற்கும் முன் கால அளவு இருந்ததுதானே! காலேஸ்வர் கோவில் அமைந்திருக்கும் உஜ்ஜெய் பூமியின் தொப்புளாகவும் இங்குதான் செவ்வாய் கிரகம் உண்டானதாகவும் கருதப்படுகிறது. 

காலனுக்கும் காலன் மகாகாளேஸ்வர் என்பதை உணர்த்தும் கதைதான் மார்கண்டேன் கதையோ!

பிரம்மமே ஓர் உருவிலிருந்து மூவுருவாகி படைத்தல் காத்தல் அழித்தல் செய்வித்தது. படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மா. இந்த பூமியை படைத்தவர் பிரம்மாதான் சூரியனையும் மற்ற கிரகங்களையும் படைத்தார்.

நமது காலஅளவுகள் எந்த மஹானின் பிறந்த நாளையோ மற்ற சம்பவங்களை கொள்ளாமல் காலத்தின் அடிப்படையில் கிரகங்களில் இயக்கங்களின் அடிப்படையில் உண்டாகப்பட்டது. இதன் படி பூமியின்  வாழ்நாள் 432 கோடி ஆண்டுகள். இதுவே ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம். இப்படி ஆயிரம் மகாயுகம் பிரம்மாவின் பகல். இது போல் ஆயிரம் மகாயுகம் ஒரு இரவு. இதில் பகலில் படைப்பும். இரவில் படைப்பு அடங்கும் பிரளயமும் ஏற்படும்.இப்படி 365 நாட்கள் ஒரு வருடமும் 100 வருடம் அவர் ஆயுட்காலம்.(864x 365x100). அதன் பிறகு படைப்பு இல்லாமல் சகல கிரகங்களும் பிரபஞ்சமும் இல்லாமல் போகும். பிரம்மம் மட்டும் இருக்கும். அவர்தான் மஹாகாலேஷ்வரோ!

மீண்டும் பிரம்மம் மூவுரு கொண்டு புதிய பிரம்மாவைக் கொண்டு படைப்பு தொடங்கும்.

எனவே புணரபி ஜன்னம் புரணபி மரணம் என்பது சூரிய சந்திர கிரகங்களுக்கும் நம்மை படைக்கும் பிரம்மாவிற்கும் உண்டுதானே!!!!!

கடைசியாக துஷ்யந் ஶ்ரீதர் சொன்ன ஒரு குட்டி கதை.

ராமர் திரும்பி வைகுண்டம் செல்லும் முன் அனுமானிடம் ஒரு கணையாழியை கொடுத்தார். அதை வாங்கி கண்ணில் ஒற்றியதும் உருண்டு ஒரு பிளவிற்குள் சென்று மறைந்தது. ராமர் வருந்தாதே அது பாதாளலோகத்தில் மஹா பலியிடம்தான் உள்ளது, சென்று பெற்றுக் கொள் என்றார். அனுமனும் ்அங்கு சென்று  மஹாபலியிடம் மோதிரத்தைப் பற்றி கேட்டார். ஆம். அது இங்குதான் இருக்கிறது என ஓர் அறையின் கதவை திறந்து உன்னுடையதை எடுத்துக்கொள் என்றார். அறையின் உள்ளே மோதிரங்கள் மலைபோல் குவிந்திருந்தன! வியந்து அனுமான் மஹாபலியை பார்க்க, அவர் ஒவ்வொரு ராமவதாரம் முடியும்போதும் உனக்கு கொடுத்து போல் ராமர் அனுமாருக்கு கொடுப்பார். அவை யாவும் உன்னுடையது போல் உருண்டு இங்குதான் வரும் என்றாராம். எத்தனையோ மொழிகளில் ராமாயணம் போல் ஒவ்வொரு திரேதா யுகத்திலும் ஒரு ராமவதாரம் உண்டல்லவா😁

No comments:

Post a Comment