Sunday, April 10, 2016

15ம் நூற்றாண்டில் தமிழகம்



விஜயநகரின் மகாமண்டலேஸ்வரராக தமிழகத்தில் திருமலை தேவமகாராஜன் ஆண்டான். பட்டீஸ்வரம்,சத்திமுற்றம் கோபிநாத பெருமாள்கோயில்கள் திருப்பணி செய்தான்.இவன் பெயராலேயே திருமலைராயன் பட்டிணம், கிளை நதி திருமலைராயன் ஆறு உள்ளது.காளமேகப்புலவரின் நண்பராய் ஊக்கம் அளித்தான். இவனுக்கு பிறகு கோனேரிராயன் சோழ, தொண்டை மண்டலத்தை ஆண்டான்.இதே காலத்தில் பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள் ஆட்சி நடைப்பெற்றது. பல்லவர்காலத்தில் செல்வாக்கு மிக்க வாணவர்களை மூன்றாம் குலோத்துங்கன் தான் வென்ற பாண்டிய நாட்டுக்கு மன்னராய் வாணவர்குலத் தலைவனுக்கு முடி சூட்டினான். சுந்தர பாண்டியனுக்குப் பிறகு மதுரை, இராமநாதபுரம், கொங்கு  நாட்டை வாணவர்கள் சிறப்பாக ஆண்டனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் கட்டினர். இக்குலத்தில் வந்த ஜடாவர்மன் குலசேகர பராக்கிரம பாண்டியனை தென் காசியை ஆண்ட பாண்டியனை நரச நாயக்கன் வென்று விஜயநகர பேரரசில் இணைத்தான்.

No comments:

Post a Comment