Saturday, April 2, 2016

அனுஷ்டானம் தெய்வத்தின் குரலிலருந்து


தனிமனிதன் தன்னை தனக்குரிய அனுஷ்டானத்தால்சுத்தப்படுத்திக்கொண்டு மற்றவர்களுக்கு தன் வாழ்க்கையை வழிக்காட்டியாக வாழ்வதே இந்து தர்மததின் உயரிய நிலை.
ஸ்நானம் ஐந்து வகை.:
வாருணம்: நதியில் மூழ்கி குளிப்பது.   அப்பு.
ஆக்நேயம்: விபூதி ஸ்நானம்.  விபூதியைகுழைக்காமல் உடல் முழுதும் பூசிக்கொள்ளள். அக்னி.
வாயவ்யம்: பசுக்களின் குளம்படி மண் காற்றில் பறந்து நம் மேல் படல் .காற்று.
திவ்யம். வெய்யிலிருக்கும் போது மழைபெய்தால்   அதில் குளிப்பது . ஆகாயம்.
ப்ராஹ்ம ஸ்நானம்: அபி மந்திரிக்கப்பட்ட தீர்த்த புரோஷணம் ஸ்நானத்திற்கு சமம்.
ஸ்நானத்தின் ஐந்து பகுதிகள்
ஸங்கல்பம், .ஸுக்த படனம், மார்ஜனம் மூழ்கி ஸ்நானம், அகமர்க்ஷமனம், தர்பணம்.ஆற்றின் நீரோட்டம் எந்த பக்கம் போகுதோ அந்த பக்கம் பார்த்து செய்ய வேண்டும். குளத்தில் குளிக்கும் போது சூரியனைப் பார்த து சூரியன்இருக்கும் திசையை பார்தது செய்ய வேண்டும்.சூரியன் இல்லாத இரவு நேரமாக இருந்தால்  கிழக்கு அல்லது வடக்குபக்கம் பார்த்து செய்ய வேண்டும்.பித்ரு கர்மாக்கு மட்டும் தெற்கு.
தியானம் செய்யும் போது பத்மாசனம் சப்பளம் போட்டும் ஆசமனம்  மற்ற காரியம் செய்யும் போது  குந்திக் கொண்டும் செய்ய வேண்டும்.நீரின் அளவு: ஆசமனத்திற்கு உளுந்து மூழ்கின்ற அளவு ஜலம். தரபணத்திற்கு  ஒரு மாட்டு கொம்பு பிடிக்கிற அளவு.

பயத்தம் கஞ்சி சேர்த்த  ஜலத்தில் பட்டு சால்வை, நார்மடி ஆகியவற்றை அமாவாசையன்று துவைத்து நிழலில் காய வைத்தால் இவை நல்ல மடிதான்.


நெருப்பை வாயால் ஊததக்கூடாது.
புருஷன் தீபத்தை  அணைக்கக்  கூடாது.
பெண்கள்  பூசணிக்காய் உடைக்கக் கூடாது.
விவாஹக் காலம், யாதரா காலம் தவிர மற்ற சமயங்களில் மனைவியுடன் சேர்ந்து சாப்பிட கூடாது.
மத்தியானம் பால் சாப்பிட கூடாது.
இரவில் தயிர் சாப்பிடகூடாது.
இரவு காலை அலம்பி துடைத்துக் கொண்டு படுக்க வேண்டும்.
ஒரு பிள்ளை  விவாக காலத்தில் ஸங்கல்பம் செய்து கொண்டு  கங்கணம் கட்டியபின் அந்த சடங்கு சேஷேஹோமத்தோடு முடிகிறவரையில்  அவனுக்கு சொந்த மாதா, பிதாக்கள்  மரணமடைந்தாலும் தீட்டுகிடையாது.
தீட்டு காலத்தில் எந்த விரதமும் பலனில்லை.ஆனால் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும். துவாதசி பாரணையில்ஆத்தி கீரை, சுண்டைகாயும் புளிக்கு பதில் எலுமிச்சை, நெல்லிமுள்ளி கட்டாயம் சாப்பிட வேண்டும்.நல்லெண்ணை கூடாது.
தூதுவளை மிகவும்  சிறப்பாக கூறப்பட்டுள்ளது. இதை சாப்பிட்டால் இந்திரிய நிக்ரஹம்  சுலபம்.
மூன்று தலைமுறைக்கு பொதுவான  மூதாதையரில்லாவிட்டால்தான் உறவுக்குள் கல்யாணம் செய்ய வேண்டும்.
கல்யாணமாகாத அக்கா இருக்கும்போது தம்பிக்கு பூணல் போடக்கூடாது.மூன்று  பிரம்மச்சாரிகள் ஒரே வீட்டில் இருக்கக் கூடாதுஎன்பதெல்லாம் தப்பு.

No comments:

Post a Comment