Wednesday, May 9, 2012

Bhramanan

குடியீனவன் குடிசைக்கும் பிராம்மணன் குடிசைக்கும்மே வித்தியாசம் கிடையாது. இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி நூல்துணிதான். குடியானவனானது நாளைக்கு என்று நாலு காசு மீத்து வைத்துக் கொள்ளலாம். பிராம்மணன் அப்படி வைத்துக் கொள்ளக் கூடாது. பிற்பாடு கொடுக்கலாம் என்று இப்போது கடன் வாங்கி கொஞ்சம் தாட்பூட் செலவு பண்ணக்கூட பிராம்மணனுக்கு ரைட் கிடையாது.  
 
மஹாபாரதத்தில், யக்ஷ ப்ரச்னத்தில், பிராம்மணன் எத்தனை எளிமையாக இருந்தான். அவன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.  
 
பஞ்சமே (அ) ஹனி ஷனி ஷஷ்டே வா சகம் பசதி ஸ்வேக்ருஹேறீ  
 
அந்ணீச (அ) ப்ரவாஸீ ச ஸ வாரிசர மோததேறீறீ  
 
ஒரு நாளில் பகல் போதை எட்டுப் பங்காக்கினால், அதில்ஐந்தாவது அல்லது ஆறாவது பங்கில்தான் பிராம்மணன் கர்மாநுஷ்டானம் எல்லாம் முடித்துச் சாப்பிடுவான். அதன்முன், நாஸ்தா, கீஸ்தா எதுவும் கூடாது. இதுதான் பஞ்சமே அஹனி ஷஷ்டே வா அந்த வேலையில்கூட என்ன சாப்பாடு. சக்கரைப் பொங்களும் பாதாம்கீருமா. அல்லது தேஹ புஷ்டி தரும் மாம்ஸாதிகளா. இல்லை. சாகம் பசதி என்றால் ஏதோ ஒரு கீரையைப் பிடுங்கி வேக வைத்துத் தின்ன வேண்டும் என்று அர்த்தம். ஏதோ ஒரு முள்ளிக் கீரையோ, பசலைக் கீரையோ, போன்னாங்கண்ணியோ ஆற்றங்கரையில் யாருக்கும் சொந்தமில்லாமல் முளைத்திருப்பதை மட்டும் சமைத்துச் சாப்பிட வேண்டும். பிராம்மணன் நதி தீரத்தில் வசிக்க வேண்டும் என்று வைத்ததற்கு காரணமே அப்போது தான் அவன் அடிக்கடி ஸ்நானம் செய்ய முடியும் என்பது ஒன்று. இன்னொரு காரணம் அங்கே தான் பணம் காசே வைத்துக் கொள்ளக் கூடாத இவன், விலை கொடுக்கலாமா, யாசிக்கலாமா, நாலு கீரையைப் பிடுங்கி வேக வைத்து ஜீவனை ரக்ஷித்துப் கொள்ளலாம் என்பது யார் இந்தப் பார்ப்பான். பிடுங்கித் தின்ன வந்தான். என்று யாறும் அதட்ட முடியாதபடி வாழ வேண்டும் என்று அர்த்தம். கடன் வாங்கக் கூடாது. கடன் வாங்கலாமென்றால் போக்யங்கள். லக்ஷரிகளில் மனஸ்போதும். அதற்கு இடமே கொடுக்கக்கூடாது. இதுதான் அந்ருணீ என்றது. தரித்திரமும், அபரிக்ரஹமும் (அத்யாவசியத் தேவைக்கு அதிகமாக ஒரு புள்ளைக்கூட வைத்துக் கொள்ளாமலிருப்பதும்) தான் பிராம்மண லக்ஷணமானதால், கடனும் வாங்கக்கூடாது என்று இருக்கிஸம வாய்ப்பு விஷயம்  
குணம்,. மனப்பான்மை வைத்துத் தொழில் என்பது வெறும் புரள் என்கிற மாதிரியே தான் e quality of opportunity (எல்லோருக்கும் ஸமமான வாய்ப்பு) இருக்க வேண்டும் என்பதும். இது நடைமுறை சாத்தியமே இல்லை. திருஷ்டாந்தமாக மெடிகல் ஸீட், எஞ்சினியரிங் ஸீட் இவ்வளவு தான் என்று நிர்ணயம் பண்ணிவிடுகிறார்கள். இதெல்லாவற்றையும்விட மிகக் குறைவாகத்தான் அட்டாமி ஸயின்ஸ் (அணு விஞ்ஞானம்) மற்றும் அநேக புதுப்புது specialised subject -களில் அட்மிஷனை நிர்ணயிக்கிறார்கள். இவற்றுக்கு ஒரே மாதிரி தகுதியுள்ள புத்திஸாலிகள் போட்டியிடும் போதே அவர்களின் அநேகரை ,செலேக்ட் பண்ணாமல், மற்றவர்களைத்தான் பண்ணுகிறார்கள். அப்படிப் பண்ணுவதுதான் நடைமுறை ஸாத்யம். பெரிய அதிகாரப் பதவிக்குப் பரீ¬க்ஷ வைக்கிற போதும் இப்படியேதான் ஒரே க்வாலிஃபிகேஷன் உள்ளவர்களிலேயே பலரை நிறுத்தும்படியாகிறது. வைத்யம் பண்ணவும், புது விஞ்ஞான விஷயங்களில்  
 
ஆராய்ச்சி பண்ணத் தெரிந்து கொள்ளவும் ஆசைப் படுகின்ற எல்லோருக்கும் அதாவது அதற்கான நல்ல தகுதி பெற்ற எல்லோருக்கும் சான்ஸ் கொடுக்கத்தான் வேண்டும் என்று வாதம் பண்ணினால் அது சரியாயிருக்குமா?இந்த தேசத்துக்கு இத்தனை டாக்டர் இருந்தால் போதும், ஸ்பெஷலிஸ்ட் இருந்தால் போதும், ஸயன்டிஸ்ட்களும் அதிகாரிகளும் இவ்வளவு போதும் என்பதால் ஒரு அளவோடு நிறுத்திக் கொண்டு, தகுதியுள்ள மற்ற எல்லாரையும் தள்ளும்படியாகிறது என்பதை எல்லாருமே ஒப்புக் கொண்டு பேசாமலிருக்கிறோம். இதே போலத்தான் தேவ சக்திகளை லோகத்துக்கு அநுகூலம் பண்ணித்தர ஜனங்களில் இத்தனை சதவிகிதம் மட்டும் கர்மாநுஷ்டானம் பண்ணினால் போதும்;பாரம்பரியமாக வந்திருக்கிற இவர்கள் போதும், இதற்கு மேல் அவசியமில்லை, அப்படி செய்தால் மற்றவர்கள் செய்ய வேண்டிய காரியங்கள் கெட்டுப் போகும் என்று வர்ண விபாகம் பண்ணி வைத்திருக்கிறது. ஃப்ரெஞ்ச் ரெவல்யூஷன் (பிரான்சுப் புரட்சி) கொண்டு வந்துவிட்ட அநேக அபேதவாதங்களை சாஸ்திர விஷயத்தில் பொருத்த வேண்டுமென்று, யோசிக்காமல் கோஷம் போடுகிறோம் - அவை நம் லௌகிக லெவலிலேயே ஸாத்யமில்லை என்பதைப் பார்த்தும் புரிந்து கொள்ளாமலே! தொடரும்.






றது.

No comments:

Post a Comment