Friday, May 4, 2012

HINDUSIUM


இவர்கள் ஹிந்துக்களைப் போல்ப் பல ஜன்மங்கள் உண்டு என்பதையும் ஒப்புக் கொள்ளவில்லை. அப்படி ஒப்புக் கொண்டாலாவது கிறிஸ்துவுக்கும், நபிக்கும் முற்பட்டவர்கள் மறுபடி மறுபடி பிறக்கிறபோது இந்த இரண்டு பேருக்குப் பிற்பாடும் ஜன்மா எடுத்து, இவர்களை அநுசரிக்கிற வாய்ப்பு (chance) பெற்று, கதிமோக்ஷம் அடைய வழியிருக்கிறது என்று சமாதானம் சொல்லலாம். ஆனால் இந்த மதங்களிலோ ஜீவனுக்கு ஒரே ஜன்மாதான் என்று சொல்லியிருக்கிறது. ஆதலினால், எத்தனையோ ஆயிரம், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தோன்றிய இத்தனை ஜன்மங்களும் கூண்டோடு நகரத்துக்குத்தான் நிரந்தர வாசமாகப் போயிருக்க வேண்டும் என்றாகிறது. தான் சிருஷ்டித்த ஜனங்களுக்கு லக்ஷே£பலக்ஷம் வருஷங்கள் வழிகாட்டுகிற ஆச்சார்யர்களையே அனுப்பி வைக்காமல், அவர்களை மீளா நரரத்தில் போடுபவனாக ஒரு கடவுள் இருக்கிறான் என்றால், அப்படிப்பட்ட இரக்கமே இல்லாத கடவுளை எதற்காக ஆராதிக்க வேண்டும். அதாவது கடவுளை அடைவதற்காக ஏற்பட்ட மதமே வேண்டாம் என்று சொல்லி விடலாம்.

பலவிதமான தேசங்கள், அவற்றில் பலவிதமான சீதோஷ்ண ஸ்திதிகள், அதற்கேற்ற பயிர் பச்சைகள், இவை எல்லாவற்றுக்கும் அநுகுணமாக பிற்பாடு ஒரு பண்பாடு என்று லோகத்தில் இருக்கிறது. இதில் எல்லாவற்றுக்கும் இடம் கொடுப்பதான வேதம்தான் ஆதியில் எல்லாவிடத்திலும் இருந்திருக்கிறது. பிற்பாடு அங்கங்கே ஜனங்களின் ஆசை அபிலாஷைகள் மாறி மாறி, அதிலிருந்தே அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற அநுஷ்டானங்களை உடைய வேறு மதங்கள் வந்திருக்கின்றன. அதனால்தான் எந்த மதத்தைப் பார்த்தாலும் இப்போது அநுஷ்டானத்தில் இருக்கப்பட்ட மதங்கள், இந்த மதங்களுக்கு முன்னால் அந்த தேசங்களில் இருந்த பூர்வீக மதங்கள் இவற்றில் எதைப் பார்த்தாலும் அதிலெல்லாம் வைதிக மதத்தின் அம்சங்கள், சின்னங்கள் இருக்கின்றன. பாரத தேசத்தில் மட்டும் அந்த ஆதி மதமே தங்கி விட்டது. அதற்கப்புறமும் அது காலத்தால் தனக்கு பிற்பட்ட மதங்களை கௌரவ புத்தியுடனேயே பார்த்திருக்கிறது. அந்த அன்னிய ஜனங்களின் பக்குவத்தை ஒட்டியே இந்த அன்னிய மதங்கள் தோன்றியிருக்கின்றன. இவையே அவர்களுக்கு சிரேயஸைத் தரும் என்று கருதியிருக்கிறது. தான் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடுவது. (live and let live)

என்று சொல்கிறார்களே அந்த உத்திஷ்டமான கருத்தே ஹிந்து மதத்தின் லட்சியமாக இருந்திருக்கிறது. அதோடுகூட மற்ற தேசத்தினருக்கு ஆத்மசிரேயஸ் அளிக்கக் கூடிய பௌத்தம், ஜைனம் முதலிய மதங்களையும் தானே பெற்றெடுத்து வெளி நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. (contd..)

Cheenu
இவற்றோடு சமூக ரீதியில் (sociological) நம் மதத்துக் கென்று ஒரு பெரிய தன் அம்சம் இருக்கிறது.

எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, அதில் ஃபிலாஸஃபி (தத்வம்) , தியாலஜி (தெய்வ வழிபாடு) இரண்டும் வரும். அதோடு தன் மனிதர் ஒழுக்கம் பற்றியும் ஏதோ கொஞ்சம் வரும். அண்டை வீட்டுக்காரனைச் சகோதரனாக எண்ணு விரோதியையும் நண்பனாக நினை. உன்னிடம் மற்றவர் எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படியே c மற்றவர்களிடம் இரு. ஜீவ குலத்திடம் எல்லாம் அன்பாக இரு. சத்தியமே பேசு. அஹிம்சையை கடைபிடி. என்று உபதேசிக்கிற நெறிகள் - ethics- ஒவ்வொரு மதத்திலும் இருக்கும். தர்மம் morality எல்லாம் இதில் சேரும். ஒரளவுக்கு இத்லேயே சமூக அம்சம் (ஸோஷாலாஜிகல் என்று சொன்னேனே அந்த அம்சம்) இருக்கிறது எனலாம். ஆனால் ஒரளவுக்குத்தான். மற்ற மதங்களில் சமூக வாழ்க்கையியல் அமைப்பைப் பற்றிய விஸ்தாரமான பிரஸ்தாபம் கிடையாது.

ஆனால் ஹிந்து மதத்தில் மட்டும் சமூக வாழ்வுக்கான அடிப்படை (sociological foundation) ரொம்பவும் கெட்டியாக, வர்ணாச்ரம தர்மம் என்ற விசேஷமான அம்சம் உண்டாயிருக்கிறது.

வர்ண தர்மம் என்பது ஒன்று. ஆசாரம தர்மம் என்பது இன்னொன்று, தனி மநுஷ்யன் இன்னின்ன பிராயத்தில் இப்படியிப்படி இருக்க வேண்டும் என்பது ஆசிரம தர்மம். முதலில், சின்ன வயசில் பிரம்மச்சாரியாக இருந்து குருகுலத்தில் வித்தியாப்பியாசம் பண்ண வேண்டும். இரண்டாவது யௌவனத்தில் கல்யாணம் பண்ணிக் கொண்டு குடித்தனம் நடத்திப் பிரஜாவிருத்தி செய்ய வேண்டும். முன்றாவதாக வயசான பின் வீட்டு வாசலை விட்டு, லௌகீக சம்பந்தங்களை அடியோடு கத்தரித்துவிட்டு, சன்யாசியாகிப் பரமாத்மாவிடமே மனஸைச் செலுத்த வேண்டும் என்று விதிப்பது ஆசிரம தர்மம். இந்த ஆசிரமங்களுக்கு பிரம்மச்சர்யம், கார்ஹஸ்தானம் (க்ருஹஸ்த தர்மம்) வானப்ரஸாதம், ஸந்நியாசம் என்று பெயர். இது தனி மனிதனுக்கான தர்மம். (contd...)

Cheenu
சமூகம் society முழுவதற்குமான ஏற்பாடுதான் வர்ண தர்மம் என்பது. இப்போது ரொம்பவும் கண்டனத்துக்கு ( criticism ) ஆளாகியிருப்பது இந்த வர்ண தர்மம்தான். வர்ண தர்மத்தை ஜாதிப் பிரிவினை என்று பொதுவில் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் வர்ணம் வேறு. ஜாதி வேறு. வர்ணங்கள் நாலுதான். ஜாதிகளோ ஏகப்பட்டவை, பிராம்மணர் என்ற ஒரே வர்கத்தில் அய்யர், அய்யங்கார், ராவ் என்று பல ஜாதிகள் இருக்கிறது. நாலாவது வர்ணம் ஒன்றிலேயே பிள்ளா, ரெட்டியார், நாயகர் என்று பல ஜாதிகள் வருகின்றன. வேதத்திலும் (யஜுர் வேதம் - முன்றாவது அஷ்டகம் - நாலாவது ப்ரச்னம்) தர்ம சாஸ்திரத்திலும் பல

ஜாதிகள் பேசப்படுகின்றன. அந்தப பெயருள்ள ஜாதிகள் இப்போது இல்லை. அதெப்படியானாலும் ஜாதிகள் பல. வர்ணங்கள் நாலே நாலுதான். நம் மதத்துக்கே பெரிய களங்கம். மநுஷ்யர்களிடையே உசத்தி - தாழ்த்தி என்று பேதம் கற்பிக்கிற பொல்லாத ஏற்பாடு என்று இப்போது நினைக்கப்படுகிற வர்ண தர்மம் என்ன என்று, நன்றாக பக்ஷபாதமில்லாமல் ஆராயாந்து பார்த்தால், சமுதாய வாழ்வின் ஒழுங்குக் காகவே ஏற்பட்ட ஒப்பற்ற சாதனம் அது என்று தெளிவாகும்.

தர்மங்களின் பாகுபாடு

சமுதாய வாழ்வுக்குப் பல காரியங்கள் நடந்தாக வேண்டியிருக்கிறது. புத்தியினால் செய்கிற காரியங்கள், சரீரத்தால் செய்கிற காரியங்கள் இவற்றில் பல பல தினுசுகள் இத்தனையும் ஜன சமூகம் சுபிட்சமாக இருப்பதற்கு அவசியமாக இருக்கின்றன. இதில் ஒரு தொழில் உயர்வு, ஒரு தொழில் தாழ்வு என்று நினைத்தால் அது சுத்தத் தப்பு.

நம் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் அரிசி வேண்டும். உப்பு வேண்டும். துணி வேண்டும். புஸ்தகம் வேண்டும். இன்னும் எத்தனையோ வேண்டும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் தானியங்கள் பயிரிட்டுக் கொண்டும், உப்புக் காய்ச்சிக் கொண்டும், துணி நெய்கு கொண்டும், புஸ்தகம் அச்சுப் போட்டுக் கொண்டும் இருக்க முடியுமா. உழுகிறவன் தனக்காக மட்டுமில்லாமல் எல்லோருக்காகவும் விளைவிக்கிறான். துணி நெய்கிறவன் எல்லோருக்காகவும் நெய்கிறான். இப்படியே சமுதாயம் முழுவதற்குமாகச் சிலர் வியாபாரம் செய்கிறார்கள். சிலர் யுத்தம் செய்கிறார்கள். இப்படியே லோகம் முழுவதற்கும் ஆத்ம க்ஷேமம் ஏற்படச் சிலர் தியானமும் யாகமும் பூஜையும் செய்து கொண்டு லோகோபகாரமான சாஸ்திரங்களை ரக்ஷித்து வரவேண்டும். இப்படிப் பரஸ்பரப் பிரயோஜனத்துடன் ஜனங்கள் பல தொழில்களைப் பங்கீடு செய்து கொண்டு சௌஜன்யமாக வாழவே நம் தர்ம சாஸ்திரகங்கள் அழகாக வழி வகுக்கின்றன.

எப்படிப் பங்கீடு செய்வது. அவரவர் தகுதியை வைத்து என்றால், எல்லோருமே தங்கள் தகுதியை அதிகமாகத்தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவரவர் மனோபாவத்தை வைத்து என்றால் எல்லாரும் அந்தஸ்தான வேலைக்குத்தான் ஆசைப்படுவார்கள். அப்படியானால், மற்ற காரியங்கள் என்ன ஆவது. எல்லாக் காரியங்களிலும் ஜனங்களைச் சமூக வாழ்விற்கு இசைவாக நிரவி வைப்பது எப்படி. இப்போது நிரவி விட்டால் மட்டும் போதாது. தலைமுறைக்கு எப்படி நிரவுவது. தகுதி, மனோபாவம் இவற்றை வெளியிலிருந்து பரீக்ஷித்து முடிவு பண்ணுவது எப்படி முழுக்க சரியாக இருக்க முடியும். எல்லோரும் எல்லாவற்றுக்கும் போட்டி போடலாம் என்றால் இதெப்படி சாத்தியமாயிருக்கும். யார் நிரவுவது எப்படி நிரவுவது இதனால்தான் தொழில்களைப் பாரம்பரியமாக நிரவி வைத்து வர்ண தர்மம் என்று ஏற்படுத்தினார்கள்.

எந்தத் தொழிலானாலும் சரி. பாரம்பரியமாக வாய்ந்த அதைப் பரமேசுவரன் விதித்த ஆக்ஞையாக, லோக க்ஷேமார்த்தம் செய்கிறேன் என்று உணர்ந்து செய்தால், அதுவே ஒருத்தனுக்கு ஆத்ம க்ஷேமார்த்தமாகவும் ஆகிறது. (Contd..)
i


Cheenu
ஒவ்வொரு காரியத்தில் உள்ள ஜீவனும் கடைந்தேறுவதற்கு அநுகூலமாக வெவ்வேறு அநுஷ்டானங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. உடல் வருத்த உழைக்கிறவனை உபவாசம் இரு என்றால் அவனால் முடியுமா. புத்தியினால் காரியவங்களைச் செய்கிறவனுக்குச் சரீர போக்ஷணம் அவசியமில்லை. அவர்கள் சரீராபிமானம் நீங்கவே அதிக அநுஷ்டானங்கள் இருக்கின்றன என்று புரிந்து கொண்டால் சண்டைக்கு இடமே இல்லை.

நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதால் இந்த ஆச்சாரங்களை விட்டுவிடாமல், பின்பற்றப் பிரயத்தனம் பண்ணி வந்தால், பிற்காலத்தில் நமக்கு அர்த்தம் தெரிகிறபோது உதவும். அவரவரும் தங்களுடைய தர்மத்தை ரக்ஷித்துக் கொள்வதோடு, மற்றவர்களும் அவர்களது தர்மத்தை ரக்ஷித்துக் கொள்ள உதவி செய்வது சிலாக்கியமாகும். உனக்கேன் அந்த தர்மம். நீங்க என்னோடு வா அல்லது நானும் உன் தர்மத்தை எடுத்துக் கொள்வேன் என்று போட்டி போடாமல், மற்றவன் தன் தர்மத்தை விட நினைத்தாலும் அப்பா c அதிலேயே இரு. அதுதான் உனக்கும் க்ஷேமம். எனக்கும் க்ஷேமம் என்று சொல்ல வேண்டும்.

காரியங்கள் செய்வதில் ஒருத்தன் உயர்ந்தவன், ஒருத்தன் தாழ்ந்தவன் என்பது இல்லை. சமூகம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்பதால் பலவாகப் பிரித்து பல காரியங்களைச் செய்ய சாஸ்திரம் வழி சொல்கிறது. அனைவரும் மனசு போனபடி காரியம் செய்ய ஆரம்பித்தால் பொதுக் காரியம் செய்ய ஆரம்பித்தால் பொதுக் காரியம் ஒழுங்காக நடக்காது. ஏனென்றால், இன்றைக்கு ஒவ்வொருத்தனும் பிறன் பணம் எல்லாம் தன் பர்ஸுக்குள் வரவேண்டும் என்ற ஒரே ஆசைதான் இருக்கிறது. நிறையப் பணம் கிடைக்கிற வழிகளில்தான் எல்லாரும் இறங்குவார்கள். இதில் லோக க்ஷேமத்துக்கு அநுகூலமாக தொழில் பாகுபாடு இருக்காது. எனவே அவரவரும் பரம்பரைக் கிரமமாக வந்த காரியங்களையும் அநுஷ்டானங்களையுமே பின்பற்றிவந்தால் ஜன சமூகத்தில் போட்டி, பொறாமை இல்லாமல் பொதுக்காரியம் நடப்பபதோடு, அவரவருக்கும் ஆத்ம பரிசுத்தியும் உண்டாகும். சீர்திருத்தம் ( reform ) என்று சொல்லிக்கொண்டு சீர்குலைக்காமல் (deform) இருக்க வேண்டுமானால் இதையெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும். (Contd..)
i
Cheenu
யார் எந்தத் தொழில் செய்தாலும் எல்லோருக்கும் சாப்பாடு, துணி, வீடு ஆகிய அத்தியாவசியமான வசதிகளைத் செய்துதரச் சர்க்கார் கடமைப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் தேவைகளை அதிகரித்துக் கொண்டு போனால்தான் போட்டி, பொறாமை எல்லாம் உண்டாகிறது. இப்போது எல்லா நிறைவும் பணநிறைவு என்ற ஒன்றாக இருப்பதால்தான் இத்தனைக் குழப்பங்கள். இது மாறி, தன் காரியத்தை ஒழுங்காகச் செய்தால் ஏற்படுகிற நிறைவே அவரவருக்கும் ஸ்வாமி என்ற மனோபாவம் வர வேண்டும். அப்போது எங்கும் சாந்தமாக இருக்கும்.பலவித தின்பண்டங்கள் உள்ளன. பல ராகங்கள் உள்ளன. அதுபோல சமூகத்தில் பல காரியங்கள் நடக்க வேண்டும். ரசத்தில் உப்பு போட்டிருக்கிறதே என்று பானகத்தில் உப்பு போட்டால் அது ரஸாபாஸம். ஒரு ராகத்தில் இன்னொரு ராகத்தின்ஸ்வரத்தைச் சேர்த்தால் அது ரஸாபாஸம். இப்போது ஜனங்களுக்கு ரஸனைகளைப் பற்றிய ருசியே போய்விட்டது. உருக்கமான புராணக்கதை நடுவே பாகவதர்கள் கேலிப் பேச்சுக்கு வருகிறார்கள். இதை

ஜனங்களும் ரஸிக்கிறார்கள். எத்தனையோ நல்ல போஜந வகைகள் இருக்கும் போது ருசியும் இல்லாமல், ஆரோக்கியத்துக்கும் உதவாமல் இருக்கிற புகையிலையைப் புகைக்கிறார்கள். இவை சின்ன ரஸாபாஸங்கள். பெரிய ரஸாபாஸம், பொது தர்மத்துக்கு அநுகூலமாக பல விசேஷ தர்மங்களை வகுத்துத் தரும் வர்ணங்களைப் போட்டுக் குழப்புவதே!

No comments:

Post a Comment