Saturday, March 5, 2016

ஜெயகாந்தன் தொடர்ச்சி

நாளந்தாக்கு இணையான காஞ்சி சர்வகலாசாலையில்  ஸமிஸ்கிருத பேரறின்யர்கள் தமிழரர்கள் ஆசான்களாய் இருந்திருக்கிறார்கள். தர்க்கசாத்திரத்தின் பிதாமகராக கருதப்படுகின்ற திங்கநாதன் ஒரு தமிழனே . இந்து சனாதனத்தின் பெருமையை கொடிகட்டி நாட்டி ெபௌத்ர்களயையும் நாத்திகர்களயையும் தனது வாதததால் ஞானவன்மையால் வென்று உபநிஷத் செல்வங்களை உலகுக்கு அளித்த ஆதிசங்கரர் ஒரு தமிழனே.
ஸமஸ்கிருதபகைமை என்று பிரிட்டிஷ்காரர்கள் செய்த சூழ்ச்சியின் விளைவு.அந்த வீழச்சியுற்றகாலத்தில் தோன்றிய  மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை காலத்தில் வடமொழி பகைமை என்ற விழாதி நம்மை பீடிததது.
நமமை விட பலவீனமான ஒரு கலாசாரம் நவீனவிஞ்ஞான உதவிகளுடன் பலாத்கார  முறையினால்  நமமை அடக்கி ஆண்டது. இந்தியாவின் உண்மையான புராதான கலாசாங்களை காட்டு மிராண்டிதனம் என்று ஆங்கில நாட்டுமூடர்கள் நமமை பற்றி சரித திரம் எழுதினர். அதை நம நாட்டு அடிமை அறிவாளிகள்  கற்றார்கள்.
அந்நியர்கள் மாதிரி ஆடையணிந்து கொண்டு  இந்த உஷ்ண பிரதேசத்தில் திரிவதற்கு வெட்க படாத தமிழர்கள், நமது கலாசார பண்புகளில் ஒன்றான திருநீரணிதல் ,திருமண்இடுதல் ஆகியவற்றுக்கு வெட்கபட்டதுமல்லாமல் அவற்றைய் பரிகசித்து ஏளனமும் செய்தார்கள்.
இந்த செய்கை பகுத்தறிவின்பாற்பட்டது என்று அவர்கள் நம்பினார்கள்.இது சமுகவாழ்க்கையில் இன்னொருவரின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுகின்ற அநாகரீகம்என்றுகூட அவர்களுக்கு புரியவில்லை.
கடவளை எல்ல மதத்தினரும் நம்புகின்றார்கள்.மதங்கள்  மார்க்கங்களே. அல்லாஹ்என்பதற்கு கடவுள் என்றே பொருள்.கடவுளைநம்புகிறவர்கள்.முட்டாள்என்பதுஏதோ   பிராமணர்களைமட்டுமே  பழிக்கிறதுஅல்ல. ஏசுவும் நபி நாயகமும்காந்தியும் கடவுளை நம்பியவர்கள் என்பதேநினைவிற்கு வருவதில்லை.
கடவளும் குழந்தைகளும் இல்லாமல் போயிருந்தால் பெரும்பான்மை குடும்பத்திலிருந்து பெண்கள்   வளியேறி போயிருப்பார்கள்இவ்விருண்டின் நம்பிக்கையால் மட்டுமே பெண் தன் துயரங்களை மறந்து வாழ்கிறார்கள்.

No comments:

Post a Comment